search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்திரமேரூர் அருகே உப்பு வியாபாரியை தாக்கி ரூ.16 ஆயிரம் பறிப்பு
    X

    உத்திரமேரூர் அருகே உப்பு வியாபாரியை தாக்கி ரூ.16 ஆயிரம் பறிப்பு

    • 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    மரக்காணத்தைச் சேர்ந்தவர் சிவனந்தபெருமாள். மாற்றுத்திறனாளியான இவர் உப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் வந்தவாசி, செய்யார், சேத்துபட், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உப்பு லோடு இறக்கியதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டு, உத்திரமேரூர் வந்தார்.

    அவர், தீட்டாளம் சாலையில் வைப்பனை கிராமம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவனந்தபெருமாளை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×