என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேலக்கரமனூர் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நகையை திருடி தப்பி இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேலக்கரமனூர் கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இரவு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச் சென்றனர். இந்தநிலையில் காலையில் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது.

    நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நகையை திருடி தப்பி இருப்பது தெரிந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி புருஷோத்தமன் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×