என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை மாற்றக்கோரி போராட்டம்
    X

    ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை மாற்றக்கோரி போராட்டம்

    • ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    • ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடையாததால் காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஆகியோர் ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×