என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- உத்திரமேரூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு இவரது மகன் செல்வமுத்து என்கிற பெருமாள் (வயது 26). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு அருகிலுள்ள இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்சார வயர் இவர் மீது பட்டதால் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






