என் மலர்
உள்ளூர் செய்திகள்

உள்ளாவூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
- உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
- பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
இதில் இளைஞர்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பழக்கம் எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். முகாமின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை உள்ளாவூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர். எம் ஆஸ்பத்திரியில் இருந்து மக்கள் நல மருத்துவத்துறை டாக்டர் சந்தியா தலைமையில் சிறப்பு டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் கிராமப்புற மக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் லலிதா, சாந்தி, ஏகவல்லி, பானுமதி, சபாபதி, ஊராட்சி செயலாளர் முனுசாமி, சமூக பணித்துறை தலைமை பேராசிரியை பிரியதர்ஷினி, துணை பேராசிரியை வினு, மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






