என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்டையார்பேட்டையில் மதுபோதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை
- மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராயபுரம்:
எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கிற பம்ப் அஜய் (வயது 23). ரவுடி. இவர் மீது 3 கொலை, கொள்ளை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன.
நேற்று நள்ளிரவு அவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவுடி அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கொலையுண்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது பை ஒன்றை கொண்டு வந்து இருந்தார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் மறைத்து வைத்து விளையாடி உள்ளனர். அங்கிருந்து அஜய் புறப்பட தயாரானபோது பை காணமால் போய் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் நண்பர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளாளல் அஜய்யை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்