என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கால்வாயில் பெண் பிணம்
- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது.
- ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய் உள்ளது. இங்கு பெண் பிணம் கிடப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 45 வயது உள்ள அந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






