என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

    • திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்.
    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு் பின் முரணாக பதில் அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் திருவள்ளூர் தேரடியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரகாஷ் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நகரின் மையப்பகுதிகளில் உள்ள கடைகள் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவள்ளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு் பின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதானவர் என்பதும் அவர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவனது நண்பர்களான மெய்யூர் கிராமத்தை சேர்ந்த தாஸ் (27) மற்றும் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (40) ஆகியோரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவது உறுதியானது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 7 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×