என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

    • ஜமுனாக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    திருவள்ளூர்:

    சென்னை ஆவடி நந்தனம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜமுனா (48). திருவள்ளூர் பூங்கா நகரில் ஜமுனாவின் உறவினர் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜமுனா தனது மகன் பிரசாந்த் (25) துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நிகழ்ச்சி கலந்து கொண்டு மீண்டும் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ராமாபுரம் அருகே சாலையில் இருந்து வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும் போது பின்னால் அமர்ந்திருந்த ஜமுனா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஜமுனாக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் ஜமுனா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    Next Story
    ×