என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி
    X

    திருவள்ளூர் அருகே கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பலி

    • திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புன் செல்வன்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புன் செல்வன். இவர் ஆவடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 31-ந் தேதி அப்புன்செல்வன் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி உள்ளார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் தாறுமாறாக வந்த கார் திடீரென போலீஸ்காரர் அப்புன்செல்வன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்புன் செல்வன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அப்புன்செல்வன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×