என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்- 8 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்8 Aug 2022 11:51 AM GMT
கடம்பத்தூர் ஒன்றியம் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். நேற்று முன்தினம் தேவேந்திரன் தன் வீட்டிற்கு தண்ணீர் எடுத்துச் சென்ற போது, குழாயை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன் தரப்பினர் மிதித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட தேவேந்திரனின் மனைவி கலைவாணி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரையும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர். இந்த கோஷ்டி மோதல் குறித்து இரு தரப்பினரும் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன், சந்திரன், கலைவாணி தேவேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X