என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
- கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவாலங்காடு அடுத்த, ஜாகீர்மங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பங்காரு அம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் பூஜை முடிந்து கோவிலை பூட்டி சென்று இருந்தனர்.
இந்தநிலையில் இன்றுகாலை கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டுப் புடவை மற்றும் பீரோவில் இருந்த பொருட்களை திருடி சென்று இருந்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக உண்டியலில் இருந்த பணம் திறக்கப்பட்டு எண்ணப்படவில்லை. எனவே உண்டியலில் சுமார் ஒரு லட்சம் வரை பணம் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






