என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
- திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கா கருமாரி அம்மன் ஆலயம் உள்ளது.
- கோவிலை திறக்க வந்த போது பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருத்தணி:
திருத்தணி நகராட்சி சுப்பிரமணிய நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கா கருமாரி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மனின் சூலம், குத்துவிளக்கு கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த ரூ.10 ஆயிரம் பணம் இருந்த உண்டியலை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை கோவில் பூசாரி மோகன வேல் கோவிலை திறக்க வந்த போது பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அம்மன்கோவிலில் சூலம் மற்றும் உண்டியல் பணம் கொள்ளைபோன சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






