search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
    X

    திருப்பூர் அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணம்

    • தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவரப்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர், ஊர் விவரம் குறித்து விசாரிக்கும் போது அவர் திருச்சியை சேர்ந்த கந்தசாமி என்பதும் பல்லடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

    கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது மர்மநபர்கள் அவரை அடித்துக்கொன்று கிணற்றுக்குள் வீசினரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×