என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இரும்பு கம்பியால் மருமகளை அடித்துக்கொன்ற மாமனார்
    X

    நெல்லையில் இரும்பு கம்பியால் மருமகளை அடித்துக்கொன்ற மாமனார்

    • முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
    • முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கூலித் தொழிலாளி.

    இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (வயது 28). இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    தங்கராஜ் மனைவி இறந்து விட்டார். இதனால் அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.

    இந்நிலையில், தமிழரசன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் தங்கராஜிக்கு வீட்டை எழுதிக் கொடுப்பதற்கு மறுத்த தமிழரசன், முத்துமாரி ஆகியோர் 2-வது திருமணம் செய்வதையும் கண்டித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் நேற்று காலை தமிழரசன் அங்குள்ள கடைக்கு செல்வதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரும்பு கம்பியால் முத்துமாரி தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.

    இதில் முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்து மாரி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து, தங்கராஜ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×