search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    திருவள்ளூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் நகை-பணம் கொள்ளை

    • வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருட்டு போனது தெரியவந்தது.
    • கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வி.எம்.நகர் சமரியாஸ் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). திருவள்ளூரில் கார் சர்வீஸ் சென்டர் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 2-ந் தேதியன்று கார்த்திகேயனின் தாயார் காலமானார். அதை தொடர்ந்து கார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு மணவாளநகரில் உள்ள வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் தங்கினார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள செயின், வளையல், மூக்குத்தி என 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20,000 பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×