என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே குட்கா விற்றவர் கைது
- திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் சுரேஷ்குமார்.
- போலீசார் கடையில் சோதனை நடத்தியதில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 40). இவர் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே குளிர்பான கடை நடத்தி வருகிறார். குளிர்பான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடையில் சோதனை நடத்தியதில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
Next Story