என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமழிசையில் காவலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- திருமழிசை ஆத்துகால் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது47).
- போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருமழிசை ஆத்துகால் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது47). இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று உதயகுமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இவரது மூத்த மகள் பவித்ரா மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
உதயகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 27 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உதயகுமார் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






