என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்து கடலூருக்கு குடிபோதையில் பஸ்சை ஓட்டிவந்த டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
- டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
- பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
புதுவையில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று முன்னாள் சென்ற காரை இடிப்பது போல் சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் சென்றவர்கள் உடனடியாக தனியார் பஸ்சை நிறுத்தினார்கள். அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் உடனடியாக தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிய போலீசார் மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பஸ்சினை ஓட்டிவந்த டிரைவர் கடலூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் தெரிவித்து மாற்று டிரைவரை கொண்டு தனியார் பஸ்சினை இயக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பஸ் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்