என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை
- செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் ஆர்ச் வளைவு உள்ளது.
- கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் "ஆர்ச்" வளைவு உள்ளது.
இதன் அருகே சாலை யோரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது. ஆனால் உடல் கிடந்த இடம் அருகே எந்த ரத்தக்கறையும் இல்லை.
மர்ம கும்பல் அவரை வேறு எங்கோ வெட்டி கொலை செய்து விட்டு இங்கு சாலையோரம் உடலை வீசி தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நேற்று இரவு அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்து சென்ற வாகனங்களை பற்றியும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை செங்கல்பட்டு அருகே கொலையாளிகள் எரித்து சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்