என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை
- சென்னையை அடுத்த மாதவரம் சீதாபதி 16-வது தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மதன்குமார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த மாதவரம் சீதாபதி 16-வது தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மதன்குமார் (வயது 35). இவர் சோழவரம் ஜி.என்.டி சாலை அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள லாரிகள் நிறுத்துமிடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யார்டு பெறுப்பாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 11 மணி அளவில் பணியில் இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் மதன்குமாரை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்து விட்டு அங்குஇருந்து தப்பி சென்று உள்ளனர்.
இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். குற்றவாளகள் கைது செய்யப்படும் போதே கொலைக்கான காரணம் குறித்து விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






