search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு
    X

    திருவள்ளூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு

    • பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    திருவள்ளூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியில் பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடை அருகே மின்மாற்றி, பெட்ரோல் பங்க் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் சாதனங்கள் அருகே உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடையில் பட்டாசுகள் இருப்பு வைக்கும் இடம் மற்றும் கடை வைக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா? தண்ணீர் வாளியில் உள்ளதா, கடைகளுக்கு 2 வழி, தீயணைப்பு கருவி உள்ளதா என பார்வையிட்டார். மேலும் விபத்துக்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×