என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் சுற்று வட்டார கடைகளில் மாமுல் கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை
- கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.
- வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடையே கலந்தாலோசனை காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில்காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவில் நடைபெற்று வருவதால் குறிப்பாக அலைபேசியில் 91140என்ற எண்ணில் துவங்கி நமக்கு அழைப்பு வந்தால் அதனை நாம் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதனால் நமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணங்கள் திருடப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் காவல் நிலையத்திற்கு வருவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பட்டாசு லைசென்ஸ் இல்லாத கடைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் , கஞ்சா விற்பனை செய்தல் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டினால் காவல் நிலையம் மற்றும் செல்போனிற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் வியாபாரிகள் தெரிவித்ததாவது பண்டிகை காலங்களில் மீஞ்சூர் பஜார் வீதியில் பொதுமக்கள்கூட்டம் அதிகம் காணப்படுவதால் காலை மாலை இரவு நேரங்களில் பஜார் வீதியில் போலீசின் கண்காணிப்பு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.
மீஞ்சூர்ரயில் நிலையத்திற்கு அருகில் அரியன் வாயல் பகுதியில் உள்ள பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்களை அரியன் வாயில் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இதனால் ரெயில் பயணிகள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இயலும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் வெளிப்புறத்தையும் இணைக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மீஞ்சூர் பஜார் வீதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் அமர்ந்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் காளிராஜ் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மீஞ்சூர் அத்திப்பட்டு கவுண்டர்பாளையம் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் ரமணா நகர் நாலூர் கேசவபுரம் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிரைம் ஆய்வாளர் சுதாகர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் ஷேக் அகமது துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்