search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் ஒரு வயது பெண் குழந்தையை தெரு நாய் கடித்து குதறியது
    X

    திருவொற்றியூரில் ஒரு வயது பெண் குழந்தையை தெரு நாய் கடித்து குதறியது

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×