என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதி திடீர் மாயம்
- விக்டர்ராஜ் என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 937 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு தங்கி இருந்த விக்டர்ராஜ்(24) என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து கியூபிரிவு போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






