என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலி- பாம்பனில் கடல் சீற்றம்: வீடுகளில் தண்ணீர் புகுந்தது
    X

    கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலி- பாம்பனில் கடல் சீற்றம்: வீடுகளில் தண்ணீர் புகுந்தது

    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதி கடல் பரப்பில் காற்றழுத்தங்கள் இருப்பதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென் வட இலங்கை அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வருகிற 21-ந் தேதி தமிழக கடலோர பகுதிக்கு நெருக்கமாக வருவதால் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் வரை உள்ள பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக 21 மற்றும் 22-ந்தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    பலத்த காற்று காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. பாம்பனில் அலைகள் ஆக்ரோஷமாக இருந்ததால் கடல் நீர் கரையோர வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×