search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் காயம்
    X

    தனியார் பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் காயம்

    • ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது.
    • பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளை வாகனங்கள் ஏற்றி சென்று வருவது வழக்கம்.

    அதேபோல் இன்று காலை ராஜகோபாலபுரம் பகுதி வரை சென்ற ஒரு தனியார் பள்ளி பஸ் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு மன்னார்குடி நோக்கி வந்தது. அப்போது ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இதனால் பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மற்றவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த மாணவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

    விபத்து பற்றி அறிந்தும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு வந்து பார்க்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த தலையாமங்கலம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×