search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் வாலிபர் கொலை: தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    சங்ககிரியில் வாலிபர் கொலை: தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

    • கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
    • பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மகள் பிரியங்கா. மகன் நந்தகுமார். பிரியங்கா சங்ககிரி அருகே உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். பின்னர் பிரியங்காவிற்கு சரத்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் தனியே வசித்து வந்தனர்.

    இதனிடையே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பார்த்திபன் (வயது 35) என்பவர் சங்ககிரி அருகே உள்ள கிரானைட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலுக்கு சென்றபோது இளம் பெண் பிரியங்காவிற்கும், பார்த்திபனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதை அறிந்த பிரியங்காவின் கணவர் சரத்குமார் பார்த்திபனை கண்டித்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பார்த்திபன் குடிபோதையில் பிரியங்காவின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார்.

    இதில் கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை அரசு வக்கீல் துரைராஜ் வாதிட்டு நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இன்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தங்கவேல், சரத்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×