என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பிறகு கணவன் கைது
- பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான்காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பின், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்:
சேலத்தை அடுத்துள்ள பனமரத்துப்பட்டி நல்லியம்புதூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 35). இவருக்கு இளம்பிள்ளையை சேர்ந்த பிரியா (28) என்பவருடன் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகனும், 8 மாதத்தில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி, பிரியா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, பனமரத்துப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி, இன்ஸ்பெக் டர் கலையரசி தலைமையிலான போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
திருமணமான 7 ஆண்டிற்குள் அவர் இறந்திருப்பதால், சேலம் ஆர்.டி.ஓ விஷ்ணுவர்த்தினியும் விசாரணை நடத்தினார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான்காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலி வேலை பார்த்து வரும் ஆறுமுகம், தனது அண்ணியுடன் தகாத உறவை வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அவரது அண்ணியுடன் தனிமையில் இருப்பதை பிரியா நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து கணவனிடம் தட்டிக்கேட்ட போது, பிரியாவிடம் தகராறு செய்து விட்டு ஆறுமுகம் வெளியேச் சென்று விட்டார். பிறகு தனது கணவன் அண்ணியுடன் தகாத உறவு வைத்திருப்பதை எண்ணி வேதனையடைந்த பிரியா, வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பின், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






