search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மதிப்பில் துணி திருட்டு- டிரைவர் மீது புகார்
    X

    திருவள்ளூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் மதிப்பில் துணி திருட்டு- டிரைவர் மீது புகார்

    • காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு காந்திப்பேட்டையில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள கம்பெனியின் கிளைக்கு லாரி மூலம் பேண்ட் துணி ஏற்றி அனுப்பி வைப்பது வழக்கம்.

    அந்த லாரியை கடந்த 15 ஆண்டுகளாக காந்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கவுரி முருகன் என்பவர் ஓட்டிச் செல்வார். ஆனால் காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 1676 பேண்ட் துணிகள் லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.

    இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் அருள்ஜோசப் மப்பேடு போலீசில் டிரைவர் கவுரி முருகன் மீது புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×