என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரட்டூரில் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை- 2 வாலிபர்கள் கைது
- கொரட்டூர் அக்ரகாரம் மேட்டு தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு.
அம்பத்தூர்:
கொரட்டூர் அக்ரகாரம் மேட்டு தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைந்து பணத்தை அள்ளி சென்று விட்டனர். இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் கோவிலில் கொள்ளையில் ஈடுபட்டது வில்லிவாக்கம் வள்ளியம்மாள் நகரை சேர்ந்த கார்த்திக், கொரட்டூர் எல்லையம்மன் நகரை சேர்ந்த சல்மான் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






