search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவகோட்டையில் திருட வந்த வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்
    X

    கொள்ளை முயற்சி நடந்த வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி.

    தேவகோட்டையில் திருட வந்த வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

    • வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர்.
    • பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ராம்நகர் 4 வீதியில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது70) என்பவரும், அவரது மனைவி குழந்தை திரோஸ் (65) ஆகியோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் குழந்தை திரோஸ் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு காணத்தங்காடு கிராமத்தில் உறவினர் திருமணத்திற்காக சென்று விட்டார்.

    அப்போது அவரது வீட்டிலிருந்து தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்து புகை வெளிவந்ததை கண்டு பொதுமக்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே இச்சம்பவம் குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×