search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்
    X

    பழனி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்

    • பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் முடியாததால் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பான எந்திரம் என்பதால் அதனை சேதப்படுத்த முடியவில்லை. நீண்டநேரம் போராடிவிட்டு பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம் எந்திரம் சேதப்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது தெரியவந்தது. எனினும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×