என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படுமா?
    X

    சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படுமா?

    • கார், பஸ்,ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
    • கால்நடைகள் அடிக்கடி திடீரென குறுக்கே செல்வதால் வாகன விபத்தில் கால்நடைகளும் சிக்கி வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமுற்று செல்கின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர், பூண்டி போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே படுத்து ஓய்வு எடுக்கிறது. இதன் காரணமாக கார், பஸ்,ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    மேலும் கால்நடைகள் அடிக்கடி திடீரென குறுக்கே செல்வதால் வாகன விபத்தில் கால்நடைகளும் சிக்கி வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து காயமுற்று செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து ஓய்வெடுப்பதால் அது அறியாத வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றை அருகில் உள்ள கோ சோலைகளில் ஒப்படைத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் சாலைகளில் கால்நடை சிறிய விட வேண்டாம் என எச்சரித்தார். இருப்பினும் கலெக்டர் உத்தரவை மீறி இது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. எனவே திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றிவரும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×