என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உசிலம்பட்டி அருகே போலீசார் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
- போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ள பீலநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.
பின்னர் படம் முடிந்ததும் அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். வழியில் அவரை மறித்த போலீசார் எங்கு சென்று வருகிறாய் என்று கூறி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தி உள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய அவர் காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவரது பெற்றோர் எழுப்பியபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்