என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்தினமங்கலம் கிராமத்தில் ரூ.38 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, தினேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஓட்டேரி குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேங்கடமங்கலம்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வேங்கடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.38 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதற்கு ரத்தினமங்கலம் ஒன்றிய கவுன்சிலரும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான ஏ.வி.எம்.இளங்கோவன் என்கிற கார்த்திக் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியகுழு துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், தி.மு.க. கிளை செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் நேதாஜி, தினேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஓட்டேரி குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






