என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை
- சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக தலைவாசல் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான மழையுடன் நின்று போனதால் ஏமாற்றமே மிஞ்சியது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 2.7 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மங்களபுரம் 8, குமாரபாளையம் 4.6, ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 29.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்