search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழல் சிறையில் அதிரடி சோதனை- வெளிநாட்டு கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
    X

    புழல் சிறையில் அதிரடி சோதனை- வெளிநாட்டு கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

    • 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் ஜெயலில் வெளிநாடுகளை சேர்ந்த விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுதது 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர், கொலம்பியாவை சேர்ந்த எட்வின், நைஜீரியாைவ சேர்ந்த டேவிட், அகஸ்டின், எர்ணாவூைர சேர்ந்த ராம்குமார் ஆகியோரை சோதனை போட்டதில் அவர்கள் செல்போன்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×