search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியல்
    X

    பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் மறியல்

    • பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
    • மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மாணவி சரளாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், மாணவி மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் தரவில்லை என்று கூறி இன்று காலை தக்களூர் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது அவ்வழியே வந்த 4 பஸ்களை சிறைப்பிடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

    போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×