என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்

    குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க கோரிக்கை

    • புகை மண்டலத்தால் குடியிருப்பு வாசிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
    • விளைநிலங்களை பாழாக்குவதுடன் தீ விபத்துகளுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது.

    உடுமலை:

    மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பல இடங்களில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதும் அவற்றை தீ வைத்து கொளுத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

    மேலும் மரங்களின் அருகில் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் பல மரங்கள் எரிந்து வீணாகி வருகிறது. மேலும் அவைகள் காற்றில் பரவி அருகில் உள்ள விளைநிலங்களை பாழாக்குவதுடன் தீ விபத்துகளுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், குப்பைகளுக்குத் தீ வைத்து கொளுத்துவதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×