என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிளில் வந்த வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்
- ஹவாலா பணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராயபுரம்:
சென்னை, வடக்கு கடற்கரை போலீசார் இன்று காலை பாரிமுனை ராஜாஜி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.70 லட்சம் ரொக்கம் இருந்தது.
விசாரணையில் அவர், மண்ணடியை சேர்ந்த சகாபுதீன்(54) என்பதும், பர்மா பஜாரில் வியாபாரம் செய்து வருவதும் தெரிந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை.
இதையடுத்து ரூ.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை எங்கிருந்து? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஹவாலா பணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரித்து வருகின்றனர்.
Next Story






