search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
    X

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனை செய்த போது எடுத்த படம்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் நவீன எந்திரங்களைக் கொண்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு:

    இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலைய வளாகம் முழுவதும் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

    இதில் விரைவு மற்றும் மின்சார ரெயில்கள், தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன எந்திரங்களைக் கொண்டு நிபுணர்கள் சோதனை செய்தனா். அப்போது, ரெயில் நிலையத்திற்குள் வந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×