என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்த போலீசார்
    X

    மத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்த போலீசார்

    • கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டு இருந்தனர்.
    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் அருந்தியர் காலனி கிராமத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தங்களது ஊரின் எல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நட்டு விழா காலங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கொடிக்கம்பம் பழமையான நிலையில் அதனை புதுப்பித்து புதிய கொடிக்காம்பம் நட கட்சியினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த மத்தூர் போலீசார் கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை போலீசார் கிராம மக்களை விசாரணைக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் முகாமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குபேந்திரன், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல துணை செயலாளர் மோகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்கு வந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்சியினர் கூறுகையில்:- கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், நேற்று இரவு கிராமத்தில் இருந்த பெண்களை சமூக பெயரை கூறி போலீசார் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தை புதுப்பித்து நடும் பணியில் ஈடுபட்டதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×