என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே தொழிலாளியை தாக்கி வேன் கடத்தல்- 10 பேர் கும்பலை தேடும் போலீசார்
    X

    திருவள்ளூர் அருகே தொழிலாளியை தாக்கி வேன் கடத்தல்- 10 பேர் கும்பலை தேடும் போலீசார்

    • வேனை எடுத்துக் கொண்டு அருண் திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு வந்தார்.
    • அருணை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பலமாக தாக்கி விட்டு அவரது வேனை கடத்திச் சென்றனர்.

    திருவள்ளூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (33). தொழிலாளி. அருண் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் மூலம் பறிமுதல் செய்த ஒருவேனை ஏலத்தில் எடுத்து அதனை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அவர் அந்த வேனை எடுத்துக் கொண்டு திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பலமாக தாக்கி விட்டு அவரது வேனை கடத்திச் சென்றனர்.

    இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருண் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை தாக்கி வேனை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×