search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் மாயமான பெண் குடோனில் பிணமாக மீட்பு- கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
    X

    குன்னூரில் மாயமான பெண் குடோனில் பிணமாக மீட்பு- கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

    • ஜோதிமணி வசித்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது.
    • குடோனில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஆளரை கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் மனோகரன்.

    இவரது மனைவி ஜோதிமணி (வயது34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இதையடுத்து மோசஸ் மனோகரனும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக ஜோதிமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான மோசஸ் மனோகரன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

    ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதிமணியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஜோதிமணி வசித்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது அது மாயமான ஜோதிமணி என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அருவங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்து பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×