என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீட்டு பணத்தை தர மறுத்த கணவன், மனைவி மீது போலீசில் புகார்
- ரூ.54 லட்சத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
- செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரிடம் சீட்டு போட்டு ரூ. 67 லட்சம் செலுத்தி உள்ளார். அதில் ரூ.13 லட்சத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் திரும்ப பெற்றுள்ளார். மீதமுள்ள ரூ.54 லட்சத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் கேசவன் மீதமுள்ள பணத்தை பெற்று தருமாறும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






