என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெருங்களத்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
BySuresh K Jangir21 March 2023 9:28 AM GMT
- குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம், நாராயணன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). செங்கல்பட்டு படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X