search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்களத்தூர் பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற கேரள வாலிபர் கைது
    X

    பெருங்களத்தூர் பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற கேரள வாலிபர் கைது

    • பெரிய பையுடன் நின்ற வாலிபரிடம் சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து செபினை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில், பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரிய பையுடன் நின்ற வாலிபரிடம் சோதனை செய்த போது 9 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த செபின் (23), என்பதும், ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து செபினை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×