search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபோதையில் பட்டாசு வெடித்த கூலித் தொழிலாளி பலி
    X

    மதுபோதையில் பட்டாசு வெடித்த கூலித் தொழிலாளி பலி

    • வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்க லம் அருகே உள்ள அர்ஜூன காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.

    திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாலாஜி மனைவியுடன் விஜயமங்கலத்தில் தங்கி இருந்தார்.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 2 வருடமாக வீட்டுக்கு வராமல் விஜயமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் குப்பை எடுத்து வரும் வேலை பார்த்து கொண்டு அங்கேயே தங்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் பாலாஜி நேற்று தீபாவளி அன்று காலை ஒரு டீக்கடை அருகே இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. அவரது இடது காது மற்றும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. அவரது உடல் அருகே பட்டாசு வெடித்து சிதறி கிடந்தன. இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பாலாஜி மது போதையில் அணுகுண்டு வெடியை வெடித்துள்ளார். அப்போது வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×