என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
- வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் தசரத நாயுடு(72). விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன், மகள் திருமணமாகி வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.
வயதான தசரதநாயுடு-விஜயா தம்பதி மட்டும் விட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினர். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்து, பீரோவில் இருந்த ரூ.51 ஆயிரத்து 500 ரொக்கம், 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இன்று காலை தசரத நாயுடு அறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






